
இராஜரீக உறவில் கம்போடியா – இலங்கை
— August 10, 2019 0 8
தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான ஆன்மீக பிரச்சார நடவடிக்கைகளில் இலங்கையும் கம்போடியாவும் ஒன்றிணைந்து செயல்படவேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். கம்போடியாவின் தலைநகராகிய நாம் பென்னில் அமைந்துள்ள விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளுக்காக இருநாட்டு தூதரக நட்புறவை வலுப்படுத்தவேண்டுமென்று தெரிவித்த சிறிசேன, பௌத்த மதத்தை அடிப்படையாகக்கொண்ட இலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையிலானதொடர்பினை பொருளாதார, வர்த்தக ரீதியாகவும் வலுவடையச் செய்வதுடன், தேரவாத பௌத்த தர்மத்தை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதற்கான செயல்பாடுகளிலும் கரங்கோர்க்கவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
அந்த செயற்பாடுகளுக்காக கம்போடிய மன்னர், பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இரு நாட்டு மகா சங்கத்தினரின் பங்களிப்பில் அச்செயல்பாடுகளை முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்ததாகவும், கம்போடிய பிரதமருக்கு இலங்கைக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.
Leave a reply